Photos

நல்லூர்க் கந்தவேற்ப் பெருமானின் 2ம் நாள் உற்சவம் மாலை இன்று நல்லுர் கந்தனின் இரண்டம் நாள் உற்சவம். ஶ்ரீ கந்தவேள் பெருமான் வெள்ளி மயில் மீதினும் வள்ளி தேவசேனாதிபதி வெள்ளி அன்ன வாகனத்திலும் வலம் வரும் இக்காட்சியானது உலகிலே வேறு எங்கிலும் காண இயலாத கண்கொள்ளா காட்சியாகும். முருகனே! செந்தில் முதல்வனே! மாயோன் மருகனே! ஈசன் மகனே! ஒருகை முகன் தம்பியே! நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும் நம்பியே கைதொழுவேன் நான். நாம் கற்று உணர்ந்த கல்வி அறிவும், நமக்கு இயற்கையாகவே அமைந்த உண்மை அறிவும், தாமே திரும்பப் பெற வேண்டி, வேலாயுதக் கடவுள் நமக்குக் கொடுத்ததினால், இப் பூமியில், நீங்கள் மயக்கங்களை விட்டு, தர்மத்தையும் ஒழுக்கத்தையும் கடைபிடித்து வாழும் உத்தம சீலர்களே, நம்மை அவனுக்கு அர்ப்பணித்து அவனுடைய புகழைச் சொல்லிச் சொல்லிப் பாடுங்கள்

 

Leave a Comment