Videos

பன்னிரு கரங்களும் அருளைப் புரியும் நல்லை நகர் சண்முக சுப்ரமணிய சுவாமிக்கு இன்று பன்னிரண்டாம் திருவிழாவின் காலைக்காட்சிகள்
சிங்கார வேலன் சிவப்புப் பட்டாடை அணிந்து வரும் சிறப்பு காட்சி

வரலாற்று சிறப்பு மிக்க புண்ணிய ஷேத்திரத்திம் நல்லையம்பதி நல்லூர் அருள்மிகு கந்தசுவாமிகோவில் வருடாந்த துர்முகிவருஷ மஹோற்ஸவத்தின் 12ஆம் நாள் உற்ஸவம் இன்றாகும்.
 

ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
ஆறுமுகம் ஆறுமுகம் என்றுபூதி
ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி
யார்கள்பத மேதுணைய தென்றுநாளும்
ஏறுமயில் வாகனகு காசரவ ணாஎனது
ஈசஎன மானமுன தென்றுமோதும்
ஏழைகள்வி யாகுலமி தேதெனவி னாவிலுனை
யேவர்புகழ் வார்மறையு மென்சொலாதோ
நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி
நீலமயில் வாகவுமை தந்தவேளே
நீசர்கட மோடெனது தீவினையெ லாமடிய
நீடுதனி வேல்வடும டங்கல்வேலா
சீறிவரு மாறவுண னாவியுணு மானைமுக
தேவர்துணை வாசிகரி அண்டகூடஞ்
சேருமழ கார்பழநி வாழ்குமர னேபிரம
தேவர்வர தாமுருக தம்பிரானே
”தரணியெலாம் காத்தனை போற்றி போற்றி எம் வாழ் நாள் முதலாகிய தெய்வமே நல்லை நகர் கந்தரே போற்றி போற்றி


Leave a Comment