திருக் கார்திகை திருவிழா | நல்லூர் 2020 காலை
Jaffna Nallur Kandaswamy Temple Thirukarthigai Festival2020 am Videos நல்லூர் கந்த சுவாமி கோவில் திருக் கார்திகை திருவிழா 2020 காலை வீடியோக்கள் ங்களகரமான கார்த்திகை மாதம், கிருத்திகை (கார்த்திகை) நட்சத்திரமும், பவுர்ணமி திதியும் கூடிய நன்னாளில் திருக்கார்த்திகை என்னும் பெரிய கார்த்திகை வருகிறது. இன்று ஜோதி தரிசனம் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் உள்ள எல்லா ஆலயங்களிலும் இன்று கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. குறிப்பாக சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் செய்யப்படுகின்றன. அங்காரகன் மகிமை கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திர நன்னாளின் மாலை நேரத்தில் வீடுகளில் தீப விளக்குகள் வரிசையாக ஏற்றிக் கொண்டாடப்படும். இதற்கு சூரிய வழிபாடே காரணமாகும். கார்த்திகை மாதம் சூரியன் விருச்சிக ராசிக்குள் நுழைகிறார். விருச்சிக ராசி செவ்வாய் பகவானுக்கு உரியது. சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய வியர்வையை பூமி தேவி தாங்கிக் கொண்டு, அதனால் உண்டான குழந்தையை வளர்த்துவர, அந்தக் குழந்தை வளர்ந்து சிவனை துதித்து பெரும் தவம் செய்ய, தவத்தினால் தேகம் முழுக்க அக்னியாக, தவத்தில் பெரிதும் மனம் மகிழ்ந்து சிவபெருமான் அவருக்கு, கிரஹ பதவி அளித்தார். கிரஹ பதவி பெற்றவர் அங்காரகன் எனும் செவ்வாய் பகவான். பூமி காரகன் என்றும் பூமி புத்ரன் என்றும் போற்றப்படுபவர். அவரும் அக்னி வர்ணமாகக் காட்சி அளிக்கக் கூடியவர். கிருத்திகை நக்ஷத்திரத்திற்கு உரிய தெய்வம் தெய்வம் அக்னி பகவான். சூர்ய அக்னி அம்சம், கிருத்திகை அக்னி அம்சம், அங்காரக அக்னி அம்சம் இந்த மூன்றும் இணைவதால் அன்று மஹா தீபம் என்றும் கார்த்திகை தீபம் என்றும், தீபம் ஏற்ற மிக உகந்த நன்னாள் எனவும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திர நாளில் விஷ்ணு, பிரம்மா இருவருக்கும் அக்னி வடிவில் சிவபெருமான் காட்சியளித்ததன் காரணமாக இந்நாளையே திருக்கார்த்திகை நாளாக கொண்டாடப் படுகிறது. திருவிளக்கின் தீபச்சுடரில் மூன்று தேவியர்களும் பிரசன்னமாகி அருள்புரிகின்ற னர். சுடர் லட்சுமி யாகவும், ஒளி சரஸ்வதியாகவும், வெப்பம் பார்வதியாகவும் கருதப்படுகிறது. தீபம் ஏற்றும் போது கிழக்கு திசை நோக்கி தீபம் ஏற்றினால் துன்பங்கள் அகலும், மேற்கு திசையில் ஏற்றினால் கடன் பிரச்சனைகள் அகலும், வடக்கு திசையில் ஏற்றினால் தடைகள் அகன்று தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் சித்தியாகும். எவ்வித காரணம் கொண்டும் தெற்கு திசையில் தீபம் ஏற்றக்கூடாது என சாஸ்திரங்கள் கூறுகின்றன. தீபம் என்பது விளக்கு அதில் எண்ணை, திரி, சுடர் ஆகிய நான்கும் சேர்ந்ததே விளக்காகும். தீபம் ஏற்ற நெய், விளக்கெண்ணை, நல்லெண்னை, பயன்படுத்த லாம். நெய் தீபம் ஏற்றினால் சுகமான வாழ்வு கிடைக்கும். விளக்கெண்ணையில் தீபம் ஏற்றினால் புகழ் ஏற்படும். நல்லெண்ணையில் தீபம் ஏற்றினால் பீடைகள் அகலும் முக்கூட்டு எண்ணை ஐங்கூட்டு எண்ணைகளில் ஏற்றினால் லட்சுமி கடாட்சம் ஏற்படும். ஐந்து முகங்கள் கொண்டவிளக்குகளை ஏற்றுவது நல்லது. நமசிவாய என்ற ஐந்தெழுத்து திருமந்திரத்தை குறிப்பாக ஐந்து முகங்கள் உள்ளது. படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என ஐந்து தொழில்களும். தத்புருஷம், சக்தியோஜாதம், ஈசானம், அசோரம், வாமதேவம் என ஐந்து முகங்களும் சிவபெருமானுக்கு உண்டு. இந்த உலகுக்கு அடிப்படை ஆதாரமாக நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம், என ஐந்து பஞ்ச பூதங்கள் உள்ளன. இவை அனைத்தும் விளக்கின் ஐந்து முகங்களாக கருதப்பட்டு வருவதால் ஐந்து முகம் கொண்ட விளக்கை ஏற்றுவது நல்லது. ஐந்து முகவிளக்கேற்றி அனைவரும் அகிலத்தில் ஐஸ்வர்யம் பெற்று வாழ கார்த்திகை தீபம் ஏற்றுவோம். கார்த்திகை விரதமிருந்து தீபமேற்றி வழிபட்டு நெல், பொரி உருண்டை நிவேதனம் செய்யுங்கள். தும்பைப்பூ முதலியனவுடன் சதுர்த்தியிலும், பௌர்ணமியிலும் தீபம் ஏற்றுபவர்கள் நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் பெற்று முக்தி அடைவர் என்றும் சாஸ்திரம் கூறுகிறது. கார்த்திகை தீபம் ஏற்றுவோம் எங்கு ஒளி நிறைந்து காணப்படுகிறதோ அங்கே மகாலட்சுமி வாசம் செய்வாள். ஒவ்வொரும் இன்று வீட்டில் தீபம் ஏற்றி மகாலட்சுமி அருள் பெறுவோமாக….
The site is incredible. Well organised and with ve...
hi,I like to get full day of festival video cd.how...
Respected sir, Vanakkam. Myself Muthukumar Subram...
I ,as a man , I have not seen or rather experience...
Namaste, I have been looking on the web for the m...
could you please help me to view festival vedios ...
very good information...
...