நல்லூர் தேவஸ்தானத்துடன் இணைந்து பணியாற்றும் திருத்தொண்டர்கள்
--
நல்லூர் பெருமானை தம் தோளில் சுமப்பதற்காக வாகனங்களின் அருகில் காத்திருக்கும் செவ்வாடை தொண்டர்களை நாம் பார்த்திருக்கிறோம்.
--
எந்த வித இலாப நோக்கமும் இன்றி, முற்று முழுதாக முருகன் பணியாக இவர்கள் செயற்படுகிறார்கள்.
--
உயர்ந்த வருமானம் பெறும் பலர், பல முக்கிய பணிகளில் உள்ள பலர், தம் வாழ்வின் பாக்கியமாக இத்தொண்டைச் செய்து வருகிறார்கள்.
--
அதிலும் பெருவிழாக் காலத்தில் விரத நியமங்களுடன் ஆசார சீலர்களாக இவர்கள் செயற்படுவது கவனத்திற்குரியதாகும்.
--
பெரும்பான்மை இளைஞர்களை கொண்ட இந்த நல்லூரானின் திருப்படையழகை காண்பதே நம் பாக்கியம்.
--
இதனை விட, நல்லூர் தேவஸ்தான நியமங்கள் பல உண்டு. மிக கண்ணியமாக, நேரம் தவறாது செயற்பட வேண்டும் என்பது அதில் முக்கியமானது.
--
அதனை இத்தொண்டர்கள் மிகச் சீராக செய்து வருவதை பார்க்கலாம். தவிரவும் தேவஸ்தான பணியாளர்களுடன் இணைந்தும், அவர்களுக்கு உறு துணையாகவும் செயற்படுவதையும் காணலாம்.
--
நல்லூர் முருகன் இத் தொண்டர்களின் பணியால், குடையழகும் நடையழகும் படையழகும் திகழ திருவீதியில் எழுந்தருள்கிறான்.
--
நல்லூர் பேராலய வாகனங்களும், பிள்ளைத்தண்டுகளும் மிகப்பாரமானவை.
--
எனவே, அதனால் ஏற்படும் உடல் வலிகளையும் சில சமயம் அவை உடலில் அழுத்துவதால் ஏற்படும் வடுக்களையும் இவ்வடியார்கள் மகிழ்வோடு ஏற்கிறார்கள்.
--
ஸ்ரீ பாதம் தாங்கிகள் என போற்றத்தக்க வகையில், செயற்படும் இவ்வடியார்களின் திருவடிகளை எம் தலை வைத்துப் போற்றுவோம்.
--
நன்றி தியாக. மயூரகிரிக்குருக்கள்
நல்லூர் தொண்டர்களின் முகநூல் இது
The site is incredible. Well organised and with ve...
hi,I like to get full day of festival video cd.how...
Respected sir, Vanakkam. Myself Muthukumar Subram...
I ,as a man , I have not seen or rather experience...
Namaste, I have been looking on the web for the m...
could you please help me to view festival vedios ...
very good information...
...