Articles

விநாயகர் சிலை கொண்டு வருவதற்கு முன் மற்றும் அதன் பின் எப்படி வழிபட வேண்டும்?*
 
🔯முழு முதல் கடவுளாக விளங்குபவர் விநாயகர். இவர் அவதர தினமாக ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி கடைப்பிடிக்கப்படுகிறது
 
மிக எளிமையாக எல்லா இடத்திலும் அமர்ந்திருக்கும் தெய்வமாகவும், எளியோருக்கு இனியவராகத் திகழ்பவர் நம் விநாயகர்.
 
🔯விநாயகரின் முழு அருளைப் பெற பிள்ளையார் சதுர்த்தி பூஜை எப்படி செய்ய வேண்டும்?
 
விநாயகர் சதுர்த்தி வழிபாடு
ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை நாடு முழுவதும் மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.
 வீடுகளில் மட்டுமல்லாமல், பொது இடங்களில் பலரும் கூடி பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு அதை நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கமாக உள்ளது.
 
நாம் பிள்ளையார் வாங்கும் போதும், வாங்கி வீட்டிற்கு வந்தவுடன் என்ன செய்ய வேண்டும்.
 
 விநாயகர் சதுர்த்தி அன்று எப்படி கணபதியை வழிபட வேண்டும் 
 
விநாயகர் சதுர்த்தி தமிழ் மாதம் ஆவணி 6ம் தேதி (ஆகஸ்ட் 22) சனிக்கிழமை அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. 
அதற்கு முன் தினமே நாம் வீட்டில் விநாயகரை அமர வைக்க உள்ள இடத்தில் ஒரு வாழை இலையைப் போட்டு சிறிது அரிசி, வாழைப்பழம், வெற்றிலைப் பக்கு வைத்து அதன் மேல் ஒரு மனை வைக்க வேண்டும்.
 
 அதன் மீது சுத்தமான வெள்ளைத் துணி போட்டு வைக்கவும்.
🔯விநாயகர் சதுர்த்தி அன்று பூஜிக்கும் முறை :
 
⚜️நாம் கடையில் சென்று பிள்ளையாரை வாங்க செல்லும் போது ஒரு தாம்பூலத் தட்டில் சிறிது அரிசி, மஞ்சள், அறுகம்புல் பரப்பி அதன் மீது பிள்ளையார் வைத்து கொண்டு வரவும்.
 
 அதை வீட்டுக்கு கொண்டு வந்ததும். வாசலில் கற்பூரம் ஏற்றி வழிபட்டு உள்ளே அழைத்து வர வேண்டும்.
 
கணபதி வந்த உடன் அவருக்கு ஒரு பட்டுத் துணி அல்லது காவி துணி உடுத்தி சிறிது பூ வைத்து வணங்கவும்.
 
🔯விநாயகர் சதுர்த்தி அன்று பூஜிக்கும் முறை :
 
அவருக்கு சந்தன பொட்டு வைக்கவும். மலர்களால் அலங்காரம் செய்யவும். அவருக்கு பிடித்த அருகம் புல் அல்லது எருக்கம்பூ மாலை செய்து அணிவிக்கலாம்.
 
அவருக்கு முன் ஒரு கலசம் வைத்து பூஜிக்க வேண்டும். 
 
ஒரு சிறு தட்டில் வாழை இலை வைத்து அரிசியை பரப்பவும். ஒரு கலசத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு மஞ்சள், குங்குமத்தை சேர்க்கவும். கணபதி பிரார்த்தனை செய்து அந்த அரிசி மீது வைக்கவும்.
பூஜைக்கு தேவையானவை
ஒரு தேங்காய் எடுத்து அதன் மீது குங்குமத்தால் ஸ்வஸ்திக் குறியீடு போடவும். 
 
கும்பத்தின் மீது மூன்று வெற்றிலை வைத்து அதன் மீது தேங்காய் வைக்கவும். கலசம் அருகே ஒரு மஞ்சளால் பிடித்த கணபதியை செய்து ஒரு வெற்றிலை மீது வைக்கவும்.
 
அதன் அருகே ஒரு வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், உள்ளிட்ட பழங்களை வைக்கவும். விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை, மோதகம் உள்ளிட்ட இனிப்பு வகைகள், பலகாரங்களை செய்து படைக்கலாம்.
*🔯​கண்பதிக்கு மடி கட்ட வேண்டும்.
அரசங்குச்சி, துளசி குச்சி, எருக்கன் குச்சி ஆகியவற்றோடு சிறிது பொரிகடலை, வெல்லம், அரிசி, ஒரு நாணயம் ஆகியவற்றை சேர்த்து கணபதிக்கு மடி கட்டவும்.
 
🔯அவரை கரைக்க அனுப்பும் போது மடியில் இருக்கும் அரசங்குச்சி, துளசி குச்சி, எருக்கன் குச்சி ஆகியவற்றை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
 
🔯கலசம் அருகே ஒரு குத்துவிளக்கு ஏற்றி வைக்கவும். அதோடு 6 அகல் விளக்குகளை எருக்கம் இலை மீது வைத்து ஏற்றவும். நல்லெண்ணெய் பயன்படுத்துவது உகந்தது.
 
🔯​​எந்த பொருட்களை கொண்டு மாலை செய்யலாம் 
 
🔯கணபதிக்கு தேங்காய் மாலை செய்து அணிவித்தால் புத்திர பாக்கியம் ஏற்படும்.
 
🔯அவருக்கு அறுகம்புல் மாலை, எருக்கம்பூ மாலை, கொண்டைக்கடலை மாலை சாற்றலாம். 
 
🔯108 கொண்டைக்கடலையை தண்ணீரில் ஊர வைத்து மாலையாக கோர்க்கலாம். இதனால் கஷ்டங்கள் நீங்கி சுபிட்சம் ஏற்படும்.
 
🔯அர்ச்சனை செய்தல்
 
மஞ்சள் பிடித்து வைத்த விநாயகருக்கு முதலில் அர்ச்சனை செய்ய வேண்டும். 
 
தீப, தூபங்களைக் காட்டி அர்ச்சனை ஆராதனை செய்ய வேண்டும்.
 
🔯வழி அனுப்புதல்
ஒவ்வொரு வீட்டில் அல்லது பொது இடத்தில் வைக்கப்பட்டுள்ள விநாயகரை சிலகலசம் வைக்கப்பட்ட அரிசி மீது ஒரு சிறிய விநாயகர்ர் 3 நாட்கள் அல்லது 5 நாட்கள் வைத்துக் கொண்டு பின்னர் அதை நீர்நிலையில் கரைக்க எடுத்துச் செல்வது வழக்கம்.
 
அப்போது முதலில் கணபதிக்கு முன் வைக்கப்பட்டுள்ள கலசத்தை எடுத்து, அந்த தேங்காயை உடைத்து பூஜைக்கு வைக்கவும்.
Tags:

Leave a Comment