பண்பாடும் கலை காலாச்சாரமும் கொண்ட யாழ்மண்ணில் வீரம்சொரிந்த சங்கிலிய மன்னன் ஆட்சி புரிந்த நல்லூரில் கோயில் கொண்டிருக்கும் அலங்கார கந்தன் என்று சிறப்பாக அழைக்கப்படும் நல்லூர் முருகனின் கருணையினை அறியாதவர் இல்லை எனலாம். எத்தனையோ இடர்களுக்கு மத்தியிலும் நல்லூர் கந்தனின் ஆலயம் சென்று வழிபட முடியாவிட்டாலும் மனதிலே முருகனை நினைத்து வழிபடும் அடியார்களுக்கும் பல நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகளான புலம் பெயர் தமிழர்களுக்கும் நல்லூர் கந்தனின் அழகிய தரிசனத்தை வழங்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட ஒரு முயற்சியே இந்த நல்லூரன.கொம்.ஆகும்.
ஆக்கபூர்வமான விமர்சனங்கள் மற்றும் ஆக்கங்களை எதிர்பார்க்கின்றோம்.
உங்கள் விமர்சனங்களையும் ஆக்கங்களையும் nalluran2010@gmail.comஎன்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
சென்ற வருடத்திருவிழா அனைத்து வீடியோக்காட்சிகளும் மிகவும் சிறப்பாக இருக்கின்றன. இம்முறை இவற்றை எம்மைப்போன்ற வெளிநாடுகளில் வசிக்கும் அடியவர்களுக்கு பார்ப்பதற்கு அரிய வாய்ப்பை உருக்கிய உங்களுக்கும், நிதியுதவி வழங்கிய அன்பருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
திருக்கார்த்திகை மற்றும் திருவாதிரை உற்சவ நிழற்படங்களைப் பிரசுரித்தமைக்கு மீண்டும் மிக்க நன்றிகள்.
இதே போல மாதந்தோறும் இடம்பெறும் கார்த்திகை உற்சவ நிழற்படங்களையும் தயவு செய்து பிரசுரிக்குமாறும் மிகவும் அன்பாகவும் தாழ்மையுடனும் கேட்டுக்கொள்கிறோம்.
உங்களின் சேவை மிகவும் இன்றியமையாதது என்பதைத் தெரிவிப்பதில் எந்தவித ஐயமுமில்லை. உங்கள் அனைவருக்கும் கடவுளின் அருள் நிச்சயம் கிடைக்கும்.
இயலுமென்றால் வரும் 1ந் திகதி இடம்பெறும் தைமாதக் கார்த்திகை உற்சவ மற்றும் 6ம் திகதி இடம்பெறவிருக்கும் புதிர்த்தின நிழற்படங்களையும் பிரசுரிபீர்களா? என மிகவும் பணிவாகக் கேட்டுக்கொள்கிறோம். இவற்றையெல்லாம் நாங்கள் பார்ப்பதற்கு மிகவும் அதிர்ஷ்டம் கொண்டவர்களாக இருக்கவேண்டும்.