பண்பாடும் கலை காலாச்சாரமும் கொண்ட யாழ்மண்ணில் வீரம்சொரிந்த சங்கிலிய மன்னன் ஆட்சி புரிந்த நல்லூரில் கோயில் கொண்டிருக்கும் அலங்கார கந்தன் என்று சிறப்பாக அழைக்கப்படும் நல்லூர் முருகனின் கருணையினை அறியாதவர் இல்லை எனலாம். எத்தனையோ இடர்களுக்கு மத்தியிலும் நல்லூர் கந்தனின் ஆலயம் சென்று வழிபட முடியாவிட்டாலும் மனதிலே முருகனை நினைத்து வழிபடும் அடியார்களுக்கும் பல நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகளான புலம் பெயர் தமிழர்களுக்கும் நல்லூர் கந்தனின் அழகிய தரிசனத்தை வழங்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட ஒரு முயற்சியே இந்த நல்லூரன.கொம்.ஆகும்.
ஆக்கபூர்வமான விமர்சனங்கள் மற்றும் ஆக்கங்களை எதிர்பார்க்கின்றோம்.
உங்கள் விமர்சனங்களையும் ஆக்கங்களையும் nalluran2010@gmail.comஎன்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
நல்லூர்த் திருவிழாப் படங்களையும், வீடியோக் காட்ட்சிகளையும் பார்த்து மகிழ்ந்தோம். மிக்க நன்றிகள். இம்முறைத்திருவிழாப் படங்களையும் வீடியோக் காட்சிகளையும் காலைத்திருவிழா, மாலைத்திருவிழா என இரண்டாகப் பிரித்தும், யாகசாலைப் பூசை, வசந்தமண்டபபூசை, கொடிமரப்பூசை போன்றவற்றையும் மிகவும் அழகாகப் பிரசுரித்திருந்தீர்கள். இவையனைத்தையும் வெளிநாட்டிகளிலிருப்போருக்கும் ஏனைய இடங்ளில் இருப்போருக்கும் பார்ப்பதற்கு வழியமைத்துக் கொடுத்த உங்களுக்கு கடவுளின் அருள் கிடைக்கும்.
மானப்பூ உற்சவப் படங்களும் அருமையாக இருக்கின்றன.