வரலாற்றுப் புகழ் மிக்க ஸ்ரீ நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த மகோற்சவத்தின் 9ம் நாளாகிய இன்று. அதிகாலை 4.30 மணி திருப்பள்ளி எழுச்சிப் பூசைஅடுத்து அதிகாலை 5.00 மணி பூசை பின் 10.00 மணிப் பூசை யாவும் திருவிழாக்கால சிறப்புடன் பல முருகனடியார்கள் ஆலயத்தில் கூடிநிற்க பத்தி பரவத்துடன் இடம்பெற்றது.
தவில் நாதஸ்வர இன்னிசை மழை காதுகளை நனைக்க ஆலய மணி ஓசை எட்டுத்திக்கும் ஒலிக்க பகல் 10.15 மணிக்கு ஆலயத்தினுள்ளே எம்பெருமானின் வசந்த மண்டபத்தில் எழுந்தருளித் தெய்வங்களாக வீற்றிருந்த வேல்,வள்ளி தெய்வானை சமேதரருக்கு ஆலய பிரதம சிவாச்சாரியார் அவர்களால் பூசை வழிபாடுகளை சிறப்புற செய்யப்பட்டது.தொடர்ந்து கொடித்தம்ப பூசை இடம்பெற்றதை அடுத்து வேல் வெள்ளி மயில் வாகனத்திலும் வள்ளி தெய்வானை வெள்ளி அன்ன வாகனத்திலும் வீற்று நாவல் நிறப் பட்டாடை அணிந்து நாவல் நிறக் குடையின் கீழ் சிவப்பு மஞ்சள் வௌ்ளை நிற மலர்களால் அழகுற அலங்கரிக்கப்பட்டு அழகுற எழுந்தருளி வந்து வேண்டி வந்த அடியவர்க்கு வேண்டும் வரமளித்து உள் வீதி முழுவதும் அருட்காட்சி கொடுத்து வசந்த மண்டபத்தை அடைந்தனர்.மதியம் 12.00 மணிப் பூசையுடன் ஆலயத்தில் மக்கள் கூட்டம் குறையத் தொடங்கியது.
கந்தனின் அடியவர்களிற்கு அன்னதான மடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.காலை மதியம் மாலை என மூன்று வேளையும் தண்ணீர்ப்பந்தல்களில் தண்ணீர் தாகம் தீர்க்கப்பட்டது.
மாலை பல முருகனடியார்கள் ஆலயத்தில் கூடிநிற்க 4.00 மணி,4.15 மணி பூசை வழிபாடுகள் சிறப்புற நடைபெற்றதை அடுத்து தவில் நாதஸ்வர இன்னிசை மழைக்கு மனதை மயக்க 4.30 மணிக்கு ஆலய மணி எங்கும் ஒலிக்க வசந்த மண்டபத்தில் எழுந்தருளித் தெய்வங்களாக வீற்றிருந்த வேல்,வள்ளி தெய்வானை சமேதரருக்கு தீபராதனைகள் வழிபாடுகள் சிறப்புற இடம்பெற்று கொடித்தம்ப பூசையும் சிறப்புற இடம்பெற்றது. 5.00 மணியளவில் எழுந்தருளித் தெய்வங்களான வேல் வள்ளி தெய்வானை யானை ஆட்டுக்கடா வாகனத்தில் அழகிய நாவல் நிறப்பட்டாடை அணிந்து மென்சிவப்பு நிறக்குடைகளுடன் பல வர்ண மலர்களால் அலகரிக்கப்பட்டு வசந்த மண்டபத்தில் இருந்து எழுந்தருளி உள் வீதி வலம் வந்து 5.45 அளவில் வெளி வீதி வந்தடைந்து அடியவர்களை பத்திப் பரவசத்தில் ஆழ்த்தி 6.30 மணியளவில் ஆலயத்திற்குள் சென்று வசந்த மண்டபத்தை அடைந்தனார். 6.45 மணி அர்த்தயாம பூசையுடன் 9 ம் நாள் திருவிழா இனிதே நிறைவுற்றது.
ஆலயத்தை சுற்றாடல்களில் பல நிகழ்வுகள் இடம்பெற்றன.
நாளை காலை 10.15 மணியளவில் வசந்தமண்டபப் பூசையுடன் ஆரம்பமாகி ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கஜவல்லி மகாவல்லி சமேதராய் கைலாசவாகனத்தில் சொர்ண அலங்காரத்துடன் உள்வீதியுலா வருவார்..!!